ஸ்ரீ ராம ஜெயத்தை போல
உன் பெயரை தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கிஉன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி சிரிப்பில்
உன் சிரிப்பின் ஓசை உயிர் வரை கேட்க்குதே
உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்.
காதல் கிறுக்கல்ஸ்

Post a Comment